சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிக அளவு பதிவாகி வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமெடுக்க தொடங்கியிருக்கிறது. இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.