தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் ரகுபதி அளித்த பதிலால் இடதுசாரிகள், பெரியாரிஸ்டுகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தெரிவித்த பதில், பகுத்தறிவாளர்களாலும், விவரந்தெரிந்த கல்வியாளர்களாலும் ஏற்கத்தக்கது இல்லை என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.