காங்கிரஸ் கட்சியினர் இப்போது அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டங்களை நாடு முழுவதும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்துதான் நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடைபெற்று வருகிறது.