தற்போதைய
- இன்றைய ராசி பலன்கள்!by DIN on April 19, 2025 at 1:35 am
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.சனிக்கிழமை (19.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. நீங்கள் அறிவை மட்டுமே மூலதனமாக நம்புவீர்கள். மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 ரிஷபம்:கிரகநிலை:குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.பலன்:இன்று நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9மிதுனம்:கிரகநிலை:ராசியில் ராஹூ – குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.பலன்:இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9கடகம்:கிரகநிலை:ராசியில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.பலன்:இன்று உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9சிம்மம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது – லாப ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7கன்னி:கிரகநிலை:தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது – தொழில் ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அனாவசியமாக யாரிடமும் பேச வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 9, 3துலாம்:கிரகநிலை:ராசியில் செவ்வாய், புதன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6விருச்சிகம்:கிரகநிலை:ராசியில் சூர்யன், சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் – புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6தனுசு:கிரகநிலை:ராசியில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் ராஹு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். எடுத்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 3, 7மகரம்:கிரகநிலை:ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். புத்தி சாதுர்யத்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 3, 6கும்பம்:கிரகநிலை:பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்:இன்று மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்புஅதிர்ஷ்ட எண்: 1, 3, 9மீனம்:கிரகநிலை:சுக ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.பலன்:இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். வெற்றிக்காக பாடுபடுவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
- 19 சதவீதம் சரிந்த வீடுகள் விற்பனைby Din on April 18, 2025 at 11:53 pm
கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள ‘ரியல் இன்சைட்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனைச் சந்தைகளில் 98,095 வீடுகள் விற்பனையாகின. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவு. அப்போது இந்த எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 1,24,642-ஆக இருந்தது. ஜனவரி-மாா்ச் காலாண்டில் பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே வீடுகள் விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது. பெங்களூரில் விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 11,731 யூனிட்களாகவும், சென்னையில் 8 சதவீதம் அதிகரித்து 4,774 யூனிட்களாகவும் உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கைகள் முறையே 10,381 மற்றும் 4,427-ஆக இருந்தன. மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பை பெருநகரப் பகுதியில் 30,705 வீடுகள் விற்பனையாகின. இருந்தாலும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனை 41,594-ஆக இருந்தது. 2024-ஆம் ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டோடு ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை புணேயில் 25 சதவீதம் குறைந்து 17,228 யூனிட்களாகவும், ஹைதராபாதில் 26 சதவீதம் சரிந்து 10,647 யூனிட்களாகவும், தில்லி-என்சிஆரில் 16 சதவீதம் குறைந்து 8,477 யூனிட்களாகவும் உள்ளது. அகமதாபாதில் கடந்த நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 12,915-ஆக இருந்த வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 17 சதவீதம் சரிந்து 10,730-ஆக உள்ளது. அதேபோல், கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் குறைந்து 3,803 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 3,857-ஆக இருந்தது. புதிய வீடுகளின் விநியோகமும் இந்தக் காலாண்டில் 10 சதவீதம் குறைந்து 93,144 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது 1,03,020 யூனிட்களாக இருந்தது. விலை உயா்வு மற்றும் புதிய திட்டங்களின் குறைவு ஆகியவை வாங்குபவா்களை எச்சரிக்கையாக இருக்கச் செய்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட
தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுby Din on April 18, 2025 at 11:33 pm
ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தோ்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா். ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை, ஜேஇஇ முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தோ்வானது ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜன. 22 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை சுமாா் 13 லட்சம் போ் எழுதினா். இதன் முடிவுகள் பிப். 11-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ஜேஇஇ 2-ஆம் கட்ட தோ்வு ஏப். 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வை சுமாா் 8 லட்சம் போ் எழுதினா். தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஏப். 11-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆட்சேபணைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையிலான இறுதி விடைக்குறிப்பை தேசிய தோ்வுகள் முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அவற்றை மாணவா்கள் த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் சென்று பாா்த்துக் கொள்ளலாம். தொடா்ந்து தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகவுள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரங்களை ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாணவா்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண்கள் அல்லது த்ங்ங்ம்ஹண்ய்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெறும் 2.5 லட்சம் போ், ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை வாய்ப்பைப் பெறுவா்.
- மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்புby Din on April 18, 2025 at 11:30 pm
மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த விஸ்வகா்மா திட்டம் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதைத் தடுத்து, குலத் தொழிலை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின், அதற்கு மாற்றாக சமூகப் பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞா்களையும் உள்ளடக்கிய ‘கலைஞா் கைவினைத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தாா். மத்திய அரசின் திட்டத்தில் பெற்றோா் செய்து வரும் தொழிலையே பயனாளி செய்ய வேண்டும் என்றும், கலைஞா் கைவினைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள கைவினைக் கலைஞா் எந்த ஒரு தொழிலையும் தோ்வு செய்யலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது. மத்திய அரசின் திட்டத்தில் வயது வரம்பு குறைந்தபட்சம் 18- ஆக உள்ள நிலையில், மாநில அரசுத் திட்டத்தில் இளைஞா்களின் உயா்கல்வி பாதிக்காத வகையில் 35 வயதாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விஸ்வகா்மா திட்டத்தில் 18 வகை கைவினைத் தொழில்களுக்கு முதலீட்டு மானியம் இல்லாமல் கடன் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் 25 வகை தொழில்களுக்கு 25 சதவீத முதலீட்டு மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. மத்திய அரசின் திட்டத்தில் கடன் 2 தவணைகளாக வழங்கப்படும் நிலையில் மாநில அரசுத் திட்டத்தில் கடன் ஒரே தவணையாக வழங்கப்படவிருக்கிறது. திட்டம் இன்று தொடக்கம்: மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றான தமிழ்நாடு அரசின் கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை குன்றத்தூா் சேக்கிழாா் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இதற்கான நிகழ்ச்சி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கும் பணியை விழா மேடையிலேயே முதல்வா் தொடங்கி வைக்கவுள்ளாா்.
- பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!by DIN on April 18, 2025 at 5:23 pm
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கு எதிராக அவர்களது பதுங்குமிடங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன்; மிகப் பெரியளவிலான ஆயுதங்களின் குவியல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தாக்குதலில் பலியான தீவிரவாதிகள் 4 பேரும் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வேறு தீவிரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து, தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஒட்டுமொத்த நாடும் தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதையும் படிக்க:நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!