திமுகவில் தாம் இருந்த போது பொதுக்கூட்டத்தில் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டதற்காக அமைச்சர் ஒருவர் விமர்சித்ததாகவும் அதற்காக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக அந்த அமைச்சரை கடிந்து கொண்டதாகவும் தற்போது பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுகவில் இருந்த போது, முதல்வர் ஸ்டாலினுக்கும் தமக்கும் எந்த விதமான நேரடியான கருத்து வேறு பாடுகளும் ஏற்பட்டது இல்லை எனறும் கூறியுள்ளார் குஷ்பு.