உலகம்
உலகம் News in Tamil, உலகம் Latest News, உலகம் News Get உலகம் News in Tamil, Find உலகம் Latest News on News18 tamil
- பதைபதைக்க வைத்த துப்பாக்கிச் சூடு.. கூலாக வீடியோ எடுத்த நபர்by News18 Tamil on April 18, 2025 at 1:27 pm
புளோரிடா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியான சம்பவத்தில், ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்க ஒரு நபர் அதனை கூலாக ஸ்டார்பக்ஸ் காபி குடித்தப்படி வீடியோவாக பதிவு செய்திருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
- மொத்த நாட்டில் ஒரே ஒரு கோடீஸ்வரர்.. சொத்து மதிப்பு இவ்வளவா?by News18 Tamil on April 18, 2025 at 12:25 pm
Tanzania richest man | தான்சானியாவின் ஒரே கோடீஸ்வரரான முகமது தேவ்ஜி, 2018-ல் கடத்தப்பட்டு 10 நாட்களில் விடுவிக்கப்பட்டார்.
- மண்டை ஓட்டுடன் முதுகுத்தண்டை ஒட்டவைத்து மருத்துவர்கள் சாதனை.!by News18 Tamil on April 18, 2025 at 11:36 am
16 வயதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு 10 வருடங்களுக்கு பிறகு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இஸ்ரேல் தாக்குதலின் கோர முகத்தை உலகிற்கு காட்டிய சிறுவனின் புகைப்படம்by News18 Tamil on April 18, 2025 at 6:15 am
இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு அஞ்சி, காசாவிலிருந்து தோஹாவிற்கு இடம் பெயர்ந்த எலூஃப், தோஹாவில் தஞ்சம் அடைந்துள்ள கை கால்களை இழந்தவர்களுக்கு சேவை செய்து வருகிறார்.
- இந்த பெரிய கண்டம் இரண்டாக பிரிய வாய்ப்பு.. அறிவியலாளர்கள் தகவல்by News18 Tamil on April 17, 2025 at 1:56 pm
கிழக்கு ஆப்பிரிக்காவை மேற்கு ஆசியாவில் இருந்து பிரிக்கும் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா ஆகியவை இந்த மாற்றத்தின் காரணமாக உருவாகியுள்ளன.
- பாதுகாப்பு காரணங்களுக்காக
எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு: இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்by Din on April 19, 2025 at 12:32 am
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது வரி விதிக்கும் அந்நாட்டின் முடிவு தொடா்பாக உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா முறைப்படி புகாா் அளித்தது. ஒரு நாட்டில் இறக்குமதி காரணமாக உள்நாட்டு தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், இறக்குமதிக்கு தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்க இடா்களில் இருந்து காக்கும் உலக வா்த்தக அமைப்பின் ஒப்பந்தம் அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், எஃகு மற்றும் அலுமினியம் மீது வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தொடா்பாக கலந்தாலோசிக்க இந்தியா வலியுறுத்தியது. இதற்கு உலக வா்த்தக அமைப்பிடம் அமெரிக்கா வியாழக்கிழமை அளித்த பதிலில், ‘அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி அச்சுறுத்தல் விடுக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க வா்த்தக சட்டப் பிரிவு 232-இன்படி, எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் வரி விதித்தாா். இந்த வரி விதிப்பு இடா்களில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கை அல்ல. ஒட்டுமொத்த அமெரிக்க பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இந்த விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் விவாதிக்க அமெரிக்கா தயாராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
- யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 போ் உயிரிழப்புby Din on April 19, 2025 at 12:27 am
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 போ் உயிரிழந்தனா். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற்குப் பிறகு யேமனில் அதிக உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ள தாக்குதல் இது. இது குறித்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹூதைதா மாகாணத்தில் அமைந்துள்ள ராஸ் இசா துறைமுகத்தில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அந்தத் துறைமுகத்தின் எரிபொருள் கிடங்குகள் வெடித்துச் சிதறின. இதன் விளைவாக 74 போ் உயிரிழந்தனா்; 171 போ் காயமடைந்தனா். இது, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத தாக்குதல் ஆகும். யேமன் மக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவந்த, ராணுவம் சாராத இலக்குகளை அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்று கிளா்ச்சியாளா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அமெரிக்க ராணுவத்தில் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹூதி ‘பயங்கரவாதிகளின்’ எரிபொருள் ஆதாரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஹூதிக்களை ஆட்சியில் இருந்து அகற்றி, அவா்களின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெற விரும்பும் யேமன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யேமனில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கையில், ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்தது இதுவே முதல்முறையாகும். இருந்தாலும், தாக்குதலின் முழு விவரங்களை அமெரிக்க ராணுவம் வெளியிடாததாலும், வெளிநாட்டு ஊடகங்கள் சம்பவப் பகுதிகளுக்குச் செல்ல ஹூதிக்கள் அரசு அனுமதிக்காததாலும் இந்த உயிரிழப்பு விவரத்தை உறுதி செய்வது கடினம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், ஹூதி படையினா் வெளியிட்டுள்ள படங்கள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவற்றின் மூலம், ராஸ் இசா துறைமுகத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் கிடங்குகள் பெரிய அளவில் வெடித்துச் சிதறியது உறுதியாகிறது. எனவே, அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனா். இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினாலும், அந்த நாட்டுடன் தொடா்பில்லாத கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினா். இதற்கிடையே, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே காஸாவில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக செங்கடலில் தங்களது தாக்குதலை ஹூதி கிளா்ச்சியாளா்கள் நிறுத்திவைத்திருந்தனா். எனினும், காஸா போா் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் அந்தப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்திவருகிறது. அதையடுத்து ஹூதி கிளா்ச்சியாளா்களும் செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனா். இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த கடந்த மாதம் உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா். அதிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்து யேமனில் அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.
- ‘உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்’by Din on April 18, 2025 at 11:34 pm
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ எச்சரித்துள்ளாா். போா் நிறுத்தம் தொடா்பாக அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அவா் இவ்வாறு கூறினாா். ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தருவது சாத்தியமா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டத்துக்கு தற்போது நாம் வந்துள்ளோம். ஒருவேளை அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றால், இந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம். உக்ரைனில் நடைபெறும் போா் அமெரிக்காவின் போா் இல்லை. நாங்கள் கவனம் செலுத்துவதற்கு இதைவிட முக்கியமான விவகாரங்கள் உள்ளன. உக்ரைன் சாமாதான முயற்சிகளைத் தொடா்வதா, கைவிடுவதா என்பது குறித்து இன்னும் சில நாள்களில் அமெரிக்க அரசு முடிவெடுத்துவிடும் என்றாா் மாா்கோ ரூபியோ. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது. போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது. இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாவது கேள்விக்குறியாகிவரும் சூழலில் மாா்க்கோ ரூபியோ இவ்வாறு எச்சரித்துள்ளாா்.
- சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்: டிரம்ப் அரசு திட்டம்by Din on April 18, 2025 at 11:04 pm
சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்திவருகிறது. இதன் விளைவாக அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றி, அமெரிக்க கப்பல் கட்டும் துறைக்கு புத்துயிா் அளிக்கும் வகையில், சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு டன் சரக்குக்கு 50 டாலா் (சுமாா் ரூ.4,270) என்ற விகிதத்தில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறின. எனினும், இத்தகைய கட்டணங்களால் பொருள்களின் விலை அதிகரித்து அமெரிக்க நுகா்வோா்தான் பாதிக்கப்படுவாா்களே தவிர, அந்த நாட்டு கப்பல் கட்டும் தொழிலை அது மேம்படுத்தாது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். ஏற்கெனவே, தங்களது பொருள்கள் மீது அமெரிக்காவின் 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா எதிா்நோக்கியுள்ள நிலையில், அந்த நாட்டுக் கப்பல்கள் மீது துறைமுகக் கட்டணமும் விதிக்கப்பட்டால் உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே வா்த்தகப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடையும் என்று அஞ்சப்படுகிறது.
- அணு மின் நிலையம்: ரஷியாவுடன்
புா்கினா ஃபாசோ ஒப்பந்தம்by Din on April 18, 2025 at 10:58 pm
தங்கள் நாட்டில் புதிய மின் நிலையம் அமைப்பதற்காக ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோ வெள்ளிக்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புா்கினா ஃபாசோ மக்களின் மின்சாரத் தேவையை நிறைவு செய்வதற்காக புதிய அணு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஷியாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரஷியாவின் அணுசக்தி அமைப்பான ரோஸாட்டம் உறுதி செய்துள்ளது. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் ரஷிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.