ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகிவிட்டதாகவே கூறப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் வகையில் டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
